சென்னையில் சாலைகள் அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? எத்தனை சாலை பணிகள் இதுவரை முடிந்துள்ளது? என்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கணைகளை அடுக்கடுக்காக தொடுத்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த அடுக்கடுக்கான கேள்வி எதற்கு என்றால் சாலை போட்டு சென்ற இரண்டே நாளில் வாயை பிளந்து கிடைக்கும் தார் சாலைகள் தான் காரணம்.நிதி ஒதுக்கப்படுகிறது அதனை ஒப்பந்தம் அடிப்டையில் சாலை அமைக்கின்றனர்.ஆனால் கடமைக்கு செய்து விட்டு செல்கின்றனர்.
அப்படி போடப்பட்ட சாலைகள் ஓர் இரு நாளில் மீண்டும் முன்பு இருந்த மோசமான நிலைக்கே சென்று விடுகிறது புகார் அளித்தால் பதிலும் கிடையாது இப்படி எத்தனையோ சாலைகள் தரமற்ற முறையில் தமிழகமெங்கும் காணப்படுகிறது.பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயலே இதற்கு காரணம் என்று பொதுமக்களும் கடித்துரைக்கின்றனர்.
இந்நிலையில் தான் உயர்நீதிமன்றத்தின் கிடுப்பிடி கேள்வியை மாநகராட்சி மீது பாய்ச்சியுள்ளது. இதற்கு மாநகராட்சி என்ன அறிக்கை அளிக்கின்றது என்பதை கவனிப்போம்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…