திமுகவால் முடியாததை முதலமைச்சர் 10 நாட்களில் செய்து முடித்தார்.! சட்டத்துறை அமைச்சர் பேச்சு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தமிழக சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் திமுகவால் செய்ய முடியாததை முதல்வர் செய்து சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், விவசாயிகள் அரசு என்பதன் அடிப்படையில் இந்த சட்டமுன்வடிவை கொண்டு வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.

இதையடுத்து நடந்த  விவாதத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில், 18 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக செய்ய முடியாததை 10 நாட்களில் சட்டம் கொண்டுவந்து முதலமைச்சர் சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பின்னர் வேளாண் மண்டல சட்டம் குறித்த விவாதத்தில், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

9 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago