திமுகவால் முடியாததை முதலமைச்சர் 10 நாட்களில் செய்து முடித்தார்.! சட்டத்துறை அமைச்சர் பேச்சு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தமிழக சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் திமுகவால் செய்ய முடியாததை முதல்வர் செய்து சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், விவசாயிகள் அரசு என்பதன் அடிப்படையில் இந்த சட்டமுன்வடிவை கொண்டு வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.

இதையடுத்து நடந்த  விவாதத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில், 18 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக செய்ய முடியாததை 10 நாட்களில் சட்டம் கொண்டுவந்து முதலமைச்சர் சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பின்னர் வேளாண் மண்டல சட்டம் குறித்த விவாதத்தில், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

41 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

3 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago