செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல்வர் நேரில் ஆய்வு ..!

Published by
Rebekal

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவு அதிக மழை பெய்துள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் நகராட்சி, இரும்புலியூர் ஆகிய பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வெள்ள தடுப்பு பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.

அதன் பின்பு அங்குள்ள மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்துள்ளார். அது  போல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

9 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago