சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published by
பாலா கலியமூர்த்தி

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக நாளை சிங்கப்பூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க நாளை முதல் 8 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஜப்பான் நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கீட்டோ நகரிலும் ஜப்பானிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஜப்பான் தொழில்துறை அமைச்சருடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளார். தமிழ்நாட்டை 2023-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை எட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

இலக்கை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு தொழித்துறை பல்வேறு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று முதலீட்டாளர்கள், வர்த்தக அமைப்பினர், அதிகாரிகளை சந்திக்க உள்ளார் முதல்வர். சிங்கப்பூர் பயணத்தை தொடர்ந்து, ஜப்பானில் சில நாட்கள் தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்கிறார் முதல்வர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

20 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago