தமிழ்நாடு

சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் திருவுருவ சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Published by
லீனா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி, சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் சுமார் ரூ.52 லட்சம் மதிப்பில் இவரது உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த திருவுருவ சிலையை இன்று திறந்து வைக்க உள்ளார். இன்று காலை  11 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதன்பின், கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அவரது சாதனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கி உள்ளார். 

சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினர் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Recent Posts

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

33 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

5 hours ago