#BREAKING: தூத்துக்குடி சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம், கலைஞர் அரங்கம் முன்பு 8 அடி உயர வெண்கலத்தால் ஆன முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவச்சிலை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்க ரூ.4,755 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து ஆனது.
இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இதற்கு முன் ஸ்பிக் நிறுவன தொழிற்சாலையில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.