முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிகாரிகள் தொந்தரவு செய்ய கூடாது என வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்- உயர்நீதிமன்றம் அதிரடி..!

Published by
murugan
  • முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளில் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதமும் அடுத்த ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதே நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவக்கூடிய நேரத்தில் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருவதாக கூறி சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் முதல்வரின் உடல் நலத்தில் அனைவருக்கும் அக்கறை உள்ளது. தொடர்ச்சியாக அவர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள், சுற்றுப் பயணம் என  ஓய்வில்லாமல் உழைத்து வருவதாக கூறினார். இதேபோல ஓய்வில்லாமல் உழைத்த குஜராத் முதல்வர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக  தனது மனுவில் சுட்டிகாட்டியிருந்தார்.

மேலும், முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளில் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முதலமைச்சரும் அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த அபராதத் தொகையையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் அடுத்த ஓராண்டுக்கு இவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

17 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

18 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

18 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

19 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

21 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

22 hours ago