இலங்கைக்கு நிதியுதவி அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உயிர் காக்கும் மருந்து உள்ளிட்டவை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.
இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தமிழர்கள் மனித நேயத்தில் உலகத்திலேயே மிகவும் உயர்ந்தவர்கள் என்பதன் அடையாளமாக இந்த தீர்மானம் உள்ளது. அரசால் வழங்கப்படும் ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரண நிதி உடன் நான் சார்ந்துள்ள குடும்பத்தின் சார்பாக ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக தருகிறேன் என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ்-ஸின் இந்தப் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.மற்றவர்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இதனை அறிவித்துள்ளார். அவருடைய நல்ல எண்ணத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…