தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் சாலையில்,திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிலையில், அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்குப் பிறகு முதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் சிலர் செய்த செயலால் வருத்தம் தெரிவித்தேன். பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை திமுகவினர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை திருப்தி செய்வதற்காக மட்டும் திமுகவினரை எச்சரிக்கவில்லை. திருந்தாவிட்டால் நடவடிக்கையை நிச்சயம். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன். பிறர் பாராட்டும் வகையில் பணி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…