கடைசி நேரத்தில் முதல்வர் கல்வெட்டுகளை திறந்து வைக்கிறார்- மு.க.ஸ்டாலின்..!

Published by
murugan

திருப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி அவை செயல்பட முடியாமல் திணறி வருகிறது.

திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய மாவட்ட மக்களை மத்தியில் பேசிய, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஆட்சி முடியப்போகிறது கடைசி நேரத்தில் முதல்வர் கல்வெட்டுகளைதிறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் தொடங்கும் போது நல்ல திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும், ஆட்சி முடிவதற்குள் திட்டங்களை திறந்து வைக்க வேண்டும். ஆனால் முதல்வர் பின்னாடி நடந்து கொண்டு செல்கிறார்.

நான்காண்டு காலம் முதல்வர் எதையும் செய்யாமல் ஆட்சி முடிந்த நேரத்தில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு காரணமான முக்கியமான மாவட்டமான திருப்பூர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி அவை  செயல்பட முடியாமல் திணறி வருகிறது.

அதற்கு பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு தான் காரணம். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள் ஆகியவற்றால் சிறுகுறு தொழில்கள் முடங்கி விட்டன. பாதிக்கப்பட்ட இந்த தொழில் வர்த்தகர்களை கொரோனா காலத்தில்  அழைத்துப் முதல்வர் பேசினாரா..? என கேள்வி எழுப்பினார். முதல்வர் மனதில் மக்களுக்கு இடமில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Published by
murugan

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

4 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

5 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago