மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் சில இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னுர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.நேற்று 21 நாளாக போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து பேசினார். அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் , என்.பி ஆர்-க்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிகு பிறப்புச் சான்றிதழ் இல்லை என என்னிடம் கூறியுள்ளார். நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் , பிரதமரும் கூட பிறப்புச்சான்றிதழ் இருக்காது. சிஏஏ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது; இந்த சட்டத்தால் ஒட்டுமொத்த மக்களே முகாமுக்கு செல்ல வேண்டிய நிலைமை தான் வரும்.
இந்தியாவிற்கு இனிமேல் அகதியாக வருபவர்களுக்கு குடியுரிமை தர வேண்டாம். ஆனால் இதற்கு முன் வந்தவர்களுக்கு குடியுரிமை தரமாட்டோம் என எனக்கூறுவது பாசிசம் என கூறினார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…