3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கிய முதல்வர்..!

Published by
murugan

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இன்றுடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் 100 நாட்களை நிறைவு பெறுகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு காணப்படும் என கூறப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இதைத்தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டதின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டார். “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நான்கரை லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 100 நாட்களில் இரண்டு லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டதின்  சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Published by
murugan

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

2 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

2 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

3 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

3 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago