திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்த இலவச வீட்டுமனைப்பட்டா திட்டத்தை பத்தாண்டுகளாக முடக்கி செயல் இழக்க வைத்திருக்கிறது அதிமுக அரசு. புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து குடியிருந்தால் போதும் என நிபந்தனை மாற்றி, ஏழை எளியோர்க்கும் பட்டா கிடைப்பதற்குரிய ஆணை பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
அதிமுக ஆட்சியில் ஆண்டு வருமானம்- நில மதிப்பு நிபந்தனைகளை மாற்றி யாருக்கும் பட்டா கிடைக்க கிடைத்து விடக்கூடாத நோக்கில் அரசு செயல்பட்டது. நிலப்பதிவேட்டை முறையாக பதிவு செய்யவில்லை; பயனாளிகளையும் அடையாளம் காணவில்லை.
சென்னையிலும் தமிழகம் முழுவதும், பல இடங்களிலும் பட்டா கோரி மக்கள் போராடினார்கள். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு இரு மாதங்கள் உள்ள நிலையில், கண்துடைப்பு “பட்டா மேளாவை” நடத்த திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர். வசூல் செய்துகொண்டு, தாசில்தார்களை மிரட்டி, அதிமுகவினர் காட்டும் நபர்களாக பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது.
ஆட்சேபணை இல்லாத நிலங்களில் குடியிருப்போருக்கும், ஏழைகளுக்கும், பட்டா வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்; பட்டா மேளா மூலம் உண்மையான பயனாளிகளுக்கு உதவுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி உத்தரவிட அளித்திட வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…