பயனாளிகளுக்கு பட்டா கிடைத்திடும் என முதல்வர் உத்தரவாதம் அளித்திடுக -ஸ்டாலின்..!

Published by
murugan

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்த இலவச வீட்டுமனைப்பட்டா திட்டத்தை பத்தாண்டுகளாக முடக்கி செயல் இழக்க வைத்திருக்கிறது அதிமுக அரசு. புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து குடியிருந்தால் போதும் என நிபந்தனை மாற்றி, ஏழை எளியோர்க்கும் பட்டா கிடைப்பதற்குரிய ஆணை பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அதிமுக ஆட்சியில் ஆண்டு வருமானம்- நில மதிப்பு நிபந்தனைகளை மாற்றி யாருக்கும் பட்டா கிடைக்க கிடைத்து விடக்கூடாத நோக்கில் அரசு செயல்பட்டது. நிலப்பதிவேட்டை முறையாக பதிவு செய்யவில்லை; பயனாளிகளையும் அடையாளம் காணவில்லை.

சென்னையிலும் தமிழகம் முழுவதும், பல இடங்களிலும் பட்டா கோரி மக்கள் போராடினார்கள். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு இரு மாதங்கள் உள்ள நிலையில், கண்துடைப்பு “பட்டா மேளாவை” நடத்த திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர். வசூல் செய்துகொண்டு, தாசில்தார்களை மிரட்டி, அதிமுகவினர் காட்டும் நபர்களாக பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது.

ஆட்சேபணை இல்லாத நிலங்களில் குடியிருப்போருக்கும், ஏழைகளுக்கும், பட்டா வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்; பட்டா மேளா மூலம் உண்மையான பயனாளிகளுக்கு உதவுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி உத்தரவிட அளித்திட வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago