“முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா,மிகுந்த அனுபவமும்,அறிவாற்றலும் கொண்டவர்”- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Published by
Edison

சென்னை:முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தமிழக ஆளுநரும்,ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார்.ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட 88 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் காலமானார்.

இதனையடுத்து,ரோசய்யா அவர்களின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்,பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் கொனிஜெட்டி ரோசய்யாவின் மறைவுச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.இவர் மிகுந்த அனுபவமும், அறிவாற்றலும் கொண்ட மூத்த அரசியல்வாதியும் ஆவார்.துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்

மறைந்த ரோசய்யா அவர்கள் 2011-16 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக ஆளுநராக இருந்தார்.மேலும்,ஆந்திர மாநில முதல்வராக 2009 – 10 வரை பதவி வகித்தார்.இவர் இந்திய தேசிய காங்கிரஸின் எம்.எல்.சி., எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.யாக இருந்தவர் மற்றும் அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல அமைச்சர் பதவிகளை கையாண்டவர்.

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றிய போது, ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜின் பதவிக்காலம் 28 ஜூன் 2014 அன்று முடிவடைந்தபோது, வஜுபாய் வாலா 1 செப்டம்பர் 2014 அன்று பதவியேற்கும் வரை,ரோசய்யா அவர்களுக்கு கர்நாடக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

49 minutes ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

1 hour ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

2 hours ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

3 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

3 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

17 hours ago