கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்களுக்கு உணவு,மருந்துகளை அளிக்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.
நேற்று இரவு முதல் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதேபோல,செங்கல்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளிலும் இதே நிலை உருவாகியுள்ளது. 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு 200 மில்லி மீட்டருக்கும் அதிக மழை சென்னையில் பெய்துள்ளது.
இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,வடசென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில்,அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்களுக்கு உணவு,மருந்துகளை அளிக்க வேண்டும் எனவும்,பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…