TN Delhi Punjabcm [FileImage]
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் ஆகியோர் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர்.
டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சந்தித்துள்ளனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், டெல்லி அரசான ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பாஜக பல தொந்தரவுகளை அளித்து வருவதாக கூறினார், மேலும் தேர்தல் காரணங்களுக்காக மட்டுமில்லாமல் ஜனநாயகத்தைக் காக்கவேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாக உள்ளது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் அந்த மசோதாவை தோற்கடிக்க முடியும். இதற்காக ஆதரவு கோரிவரும் எங்களுக்கு, பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் அளித்துவரும் ஆதரவு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என்று கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மன் கூறியதாவது, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும், அவசர சட்டங்கள் மூலமும் கட்டுப்படுத்த பாஜக நினைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…