MK Stalin : கொளத்தூரில் முதலமைச்சர் அலுவலகம் முற்றுகை.? 1000க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டம்.!

Published by
மணிகண்டன்

தமிழக மின்வாரியத்தின் கீழ் தற்காலிக பணியான கேங்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு தேர்வுகள் முடிக்கப்பட்டன. இதில் 15000 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வேலைக்கு இதுவரை 9,600 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதில் பணியமர்த்தப்படாதவர்கள் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் , முதல்வர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுவ வருவதால் அங்கு பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.

கேங்மேன் பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறியும், எந்த அடிப்படையில் அவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்றும் மின்வாரிய ஊழியர்கள் வெளிப்படியாக கூற வேண்டும். இதில் முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இதனால் கொளத்தூர் முதல்வர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், விதிமுறைகள் அடிப்படையில் தான் தகுதியான நபர்கள் கேங்மேன் பணிக்கு பணியமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

7 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

8 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

10 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

11 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

12 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

12 hours ago