சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி அக்டோபர் 7 (அதாவது இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.
கடந்த சில நாட்களாகவே முதல்வர் , துணை முதல்வர் இருவரும் தங்களது ஆதரவு நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் ஓஅறிவிப்பார் எனவும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அதன்படி, எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.பின்னர், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்ற 11 பேரில் 5 பேர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் எனவும், 6 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் எனவும் கூறப்படுகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…