சென்னையில் வேகமாக வடிந்து வரும் மழைநீர்.! 75000 மீட்பு பணியாளர்கள்.! தலைமை செயலர் தகவல்.!

Published by
மணிகண்டன்

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழையை கொடுத்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும் , அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயவாடாவில் இருந்து 5 குழுக்கள் தமிழகம் வருகை.. மீட்பு, நிவாரணத்துக்கான உதவி எண்கள் அறிவிப்பு!

மழைநீர் வெளியேற்றம் குறித்தும் , மீட்பு பணிகள் குறித்தும் தலைமை செயலர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களிடம் இன்று பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், சென்னை அடையாறுக்கு தற்போது 37000 கனஅடிநீர் வந்துகொண்டு இருக்கிறது. நேற்று 40 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வரும் அளவை விட மழைநீர் அளவு அதிகம். அடையாற்றின் வழியாக மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது.

கூவம் வழியாகவும் மழைநீர் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக முதலவர் கூவம் முகத்துவாரம் வழியாக மழைநீர் வெளியேறுவதை பார்வையிட்டார்.  முட்டுக்காடு, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.  இயற்கையாகவும் வெளியேறி வருகிறது . செயற்கையாக மோட்டார் வைத்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.

பிற மாவட்டத்தில் இருந்த்தும் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 75000 ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய , மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள வடசென்னை பகுதிகளில்  இன்று 4 முறை உணவு வழங்கியுள்ளோம். நேற்று 2 முறை உணவு வழங்கியுள்ளோம் என்றும் தலைமை செயலர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

8 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

9 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

9 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

9 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

10 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

17 hours ago