தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மாசானசாமி என்பவரின் மனைவி லதா ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இளையராஜா என்பவர் கை உருளை சின்னத்தில் போட்டியிட்டார்.
பின்னர் இவர்களுக்குள் வேட்பு மனு பரிசீலனையின் போது முரண்பாடாக இருந்தாக கூறப்படும் நிலையில், வாக்குப்பதிவின் போது மேட்டூர் வாக்குச்சாவடியில் இளையராஜாவின் ஆதரவாளர்கள் சிலர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தகராறில் முடிந்ததது. அப்போது வாக்குச்சாவடிக்கு அருகே நின்றுக் கொண்டிருந்த மாசானசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜேசு மற்றும் ராமசாமி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இதில் வெட்டுக்காயம் அடைந்த மூவரும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே இளையராஜாவின் ஆதரவாளரான மாரியப்பன் என்பவரை தூத்துக்குடி வடக்கு பரம்பு பகுதியில் சுற்றி வளைத்த சிலர் அவரை கல்லால் சரமாரியாக தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். மாரியப்பனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மோதலால் அப்பகுதியே போர்களமாக காணப்பட்டது. ஒட்டப்பிடாரம் பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…