சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் ,வழக்கமான ரயில்களை இயக்க வேண்டாம் – முதலமைச்சர் பழனிசாமி

Published by
Venu

கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்று  மத்திய உள்துறை, ரயில்வே துறை அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

  இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வேதுறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், ரயில்வே துறை டெல்லி- சென்னை மற்றும் சென்னை -டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13 ஆம் தேதியிலிருந்து இயக்கப்படும் என்று அறிவித்தது.  

பிரதமர் மோடி நேற்று  5வது முறையாக மாநில முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழ்கத்தில் வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவையை வருகின்ற 31-ஆம் தேதி வரை தொடங்காமல் இருக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.இவ்விரு ரயில்கள் தவிர இதர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு டெல்லியில் இருந்து இயக்கப்படும் ராஜ்தானி ரயில் பெட்டி குளிர்சாதன வசதி கொண்டது.குளிர் சாதன வசதிகள் கொண்ட இந்த ரயில்கள் மூலமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து  ரயில் பயணிகளையும்  பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தினாலும், 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு ,இந்த ரயில்கள் மூலம் வரும் பயணிகளை ரயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும்,அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு , பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளிலும் ,தொற்று இல்லாதவர்களை  தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை வேண்டும்.மேலும் சென்னையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயை கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.  

 

Recent Posts

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

26 minutes ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

29 minutes ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

1 hour ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

2 hours ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

14 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

15 hours ago