மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.! முதல்வர் அறிவுறுத்தல்.!

Published by
மணிகண்டன்

மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் நல திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த கள ஆய்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் உரையாற்றினார். அப்போது அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

முதலவர் பேசுகையில், அனைத்து பணிகளும் விரைவாகவும், தரமானதாகவும் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும், தொடர்ச்சியான கண்காணிப்பு இருந்தால் எந்த திட்டமும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு விடும் என்றும் அதனால் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், அரசு பணிகளுக்கு வருபவர்களுக்கு தாமதமனின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்றும், சுகாதாரம், இருப்பிடம் உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவைகளை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். வேளாண் துறையில் வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற பல்வேறு துறைகளின் துணை தேவைப்படுகிறது. என்று குறிப்பிட்டார்.

இன்று 3 மாவட்டங்கள் ஆய்வு செய்யபட்டன இதில் அனைத்தும் விவசாய மாவட்டங்கள். அங்கு விவசாயிகளின் மேம்பாடு மிக முக்கியம். விவசாய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி உரிய வகையில் செலவு செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆராய வேண்டும். வங்கி கடன், வேலைவாய்ப்பு திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருசேர கூட்டாக ஆலோசிக்க வேண்டும் அப்போது தான் மற்ற துறைகளின் செயல்பாடு தெரிய வரும் என விழுப்புரத்தில் 3 மாவட்ட கள ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு முதல்வர் அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

40 minutes ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

52 minutes ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

1 hour ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

2 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

2 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago