அமைச்சராக யார் இருக்க வேண்டும், வேண்டாம் என்பதை ஆளுநர் முடிவு செய்ய முடியாது.! ஆளுநருக்கு முதல்வர் கடும் கண்டனம்.!

Published by
மணிகண்டன்

அமைச்சராக யார் இருக்க வேண்டும், வேண்டாம் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டு இருந்தார். சிறிது நேரங்களில் அதை நிறுத்தி வைப்பதாக கூறி முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் ரவி எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்த கடிதம் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான கண்டனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்து உள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அரசியல் சாசனம் குறித்து ஆளுநருக்கு போதிய தெளிவு இல்லை என்பது அவரது நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது . ஆளுநரின் அனைத்து சட்டவித விரோத உத்தரவுகளுக்கும் மாநில அரசு பணிந்து போக வேண்டும் என்று சட்டத்திட்டம் இல்லை.

ஒரு சார்பு தன்மையுடன் செயல்படுவது தான் உங்கள் (ஆளுநர் ரவி) நோக்கம் என்பது தற்போது தெளிவாக தெரிகிறது. ஆளுநருக்கான மரியாதையை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. எப்போதும் தமிழ் கலாச்சாரத்தின் படி தங்களை மரியாதையாக நடத்தி வந்துள்ளோம். ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதால் அரசியல் சாசன சட்டத்தை மீறிய உங்கள் செயலுக்கு அடிபணிவோம் என்று அர்த்தம் இல்லை.

 அமைச்சரவையில் இருக்கும் அமைச்ரை நீக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், பிரதமருக்கு மட்டுமே உண்டு. அமைச்சரவையில் யார் இருப்பது யார் இருக்கக் கூடாது என்பதை ஆளுநர் தீர்மானிக்க முடியாது.அமைச்சரவை குறித்து தான் நான் முடிவுசெய்ய வேண்டும். என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதிய கடிதத்தில் மிகவும் காட்டமாக தனது பதிலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

3 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

3 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

5 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

5 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

5 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

6 hours ago