ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் ! இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

Published by
Venu

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

சமீபத்தில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன், விவசாய கடன் வழங்கப்பட்டு வந்தது.

இதையடுத்து தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பி அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு  வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் வழங்குவதை மறு உத்தரவு வரும் வரை வழங்கக் கூடாது என கூறியதாக தகவல் வெளியானது.

எனவே  கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக கூட்டுறவு சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிமன்றம்,மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் மத்தய அரசு ,ரிசர்வ் வங்கி 4 வாரத்தில்  பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

36 minutes ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

53 minutes ago

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

10 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

10 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

11 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

12 hours ago