கோவை மாவட்டத்தில் இரயில் முன் பாய்ந்து ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தின் இருகூர் பகுதி அருகே, இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு காதல் ஜோடி பெங்களூரில் இருந்து கன்னியாக்குமரி நோக்கி சென்று கொண்டிருந்த இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.இதில்,இருவரது உடலும் தனித்தனியாக சிதறியது.
இதுகுறித்து இரயில்வே போலீஸ் விசாரணை செய்ததில்,ஒன்டிப்புதூர் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார்(வயது 31) மற்றும் வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா(வயது 31) ஆகிய இருவரும் காதலித்து வந்தனர் என்றும்,இருவரும் சேர்ந்து ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரத் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் இருவரும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து,இருகூர் தாலுகா போலீஸ் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…