கோவை குற்றாலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை மற்றும் பருவ மழை காரணமாக நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குறிப்பாக, கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக,கடந்த அக்டோபர் 4 முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,கோவை குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து சீராக இருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி,இன்று முதல் காலை 9 மணி – மதியம் 2 மணி வரை நான்கு கட்டங்களாக 150 பேர் என்ற வீதத்தில் தினமும் 600 பேர் அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், இதற்காக https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு பெறவேண்டும் என்றும் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வனத்துறையின் இத்தகைய அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…