தமிழ்நாடு

கோவை பெண் ஓட்டுநர் பணிநீக்கம் – விளக்கமளித்த பஸ் உரிமையாளர்…!

Published by
லீனா

பெண் ஓட்டுனர் ஷர்மிளா தானாகவே விருப்பப்பட்டு பணியில் இருந்து விலகினார் என பேருந்து உரிமையாளர் விளக்கம். 

கோவையில் முதல் பெண் ஓட்டுனராக அறிமுகமானவர் ஷர்மிளா. இவருக்கு சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் வாழ்த்தும், பாராட்டும் கிடைத்து வந்தது. வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் அவரது பேருந்தில் பயணித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று, திமுக எம்பி கனிமொழி அவர்கள் பேருந்தில் பயணம் செய்தார்.  அப்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்பி அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து, அவருடன் சிறிது நேரம் பேசியபடி சென்றுள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி அவர்களுக்கு பயணித்த போது பயணம் சீட்டுக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் விளக்கம் அளிக்கையில், பெண் ஓட்டுனர் ஷர்மிளா தானாகவே விருப்பப்பட்டு பணியில் இருந்து விலகினார். அவரை நாங்கள் விலக சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

52 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

57 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago