சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்து மதிப்பிட 5 குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்து மதிப்பிட 5 குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பழுதடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு துரிதமாக புதிய குடியிருப்புகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…