கடந்த 2019-ஆம் ஆண்டு 814 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது எனவும் 3 தேர்வு மையங்களில் செல்போன் பயன்படுத்தியதாக தேர்வு எழுதியவர்கள் புகார் கொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 3 மையங்களில் முறைகேடுகள் நடந்தததாக தெரியவருவதால் அது குறித்து விசாரிக்க ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்தார்.
இந்நிலையில், 3 மையங்களில் மட்டுமல்லாமல் பல மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது என்று கூறி தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அனைத்து தேர்வு மையங்களிலும் முறைகேடு நடந்ததாக என விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு நியமனம் செய்யப்பட்டது.
அனைத்து தேர்வு மையங்களிலும் விசாரித்து ஏப்ரல் 30-க்குள் அறிக்கை தாக்கல் தர ஆதிநாதன் குழு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…