தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் ! விஜய் வசந்திற்கு பதவி

Published by
Venu

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே வருகின்ற ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய  நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,தமிழக  சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தகுழுவில் அமெரிக்கை நாராயணன், மணி சங்கர் ஐயர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. வசந்தகுமார் மகன் விஜய்வசந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் வசந்த் உள்பட 57 பேர் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் பரப்புரை குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

29 minutes ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

30 minutes ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

51 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

1 hour ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

1 hour ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

2 hours ago