தொழிலாளர்களுக்கு ‘ஹேப்பி நியூஸ்’.! 10 மணி முதல் 4 மணி வரை வேலை செய்ய வேண்டாம்…

Published by
மணிகண்டன்

சென்னை : கோடை வெயிலை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை மாவட்டங்களில் கட்டுமான தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், பொதுவெளியில் கட்டுமான தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் பார்க்கும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் நலனுக்காக அரசு மற்றும் தொழிலாளர் அமைப்புகள் பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இப்படியான கோடை கால சமயத்தில் தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு, தற்போது தொழிலக பாதுகாப்பு இயக்கம் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு மே இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலை கருத்தில் கொண்டு, அதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலக பாதுகாப்பு இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது முறையாக பின்பற்றபடுகிறாதா என்பதை சென்னை மற்றும் மதுரை மாவட்ட இணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தொழிக பாதுகாப்பு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

1 hour ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

1 hour ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

3 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

3 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

5 hours ago