திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகள் கேட்கக்கூடிய நிலையில், திமுக 22 தொகுதிகள் மட்டும் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் இழுபறியில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே, நேற்று காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் தனித்தனியாக மாவட்ட தலைவர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் நீற்று மீண்டு திமுக சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு குறைவான இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது. இந்த இடங்களை நாம் பெற வேண்டுமா? இல்லை மாற்று வழி என்ன செய்வது என்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திமுக ஒதுக்கும் இடங்களை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டால் இன்று மாலையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கேட்டும் 27 தொகுதிகளை திமுக வழங்குமா? இல்லை திமுக கொடுக்கும் இடங்களை காங்கிரஸ் பெறுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…