அதிமுகவுடன் தொடர்ந்து இழுபறி – இன்று இறுதியாகும் தொகுதி பங்கீடு – ஜிகே வாசன்

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஜிகே வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

அதிமுக கூட்டணியில் பாமக 23, பாஜக 20 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக 3 முதல் 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஜிகே வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் இன்று தொகுதி பங்கீடு இறுதியாகும் என்றும் தமாகாவுடன் அதிமுக பேசுவதில் எந்தவித தயக்கமும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சின்னத்தை பொறுத்தவரையில் நீதிமன்ற மூலம் தனி சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறோம் என கூறியுள்ளார். வெற்றி கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்தார். இன்று மாலை அதிமுகவுடன் தமாகா மீண்டும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இதன்பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி! 

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

13 minutes ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

7 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

8 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

10 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

10 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

11 hours ago