மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல்…!

Published by
லீனா

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும்,  நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த பேச்சு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், 2 மாதத்தில் போலீசார் விரைவில் விசாரணை முடித்து இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 3 ஆண்டாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது ஏப்ரல் 27-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, ஜூன் 17-ம் தேதி, நீதிபதி இளங்கோவன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி கூறுகையில், எச்.ராஜாவுக்கு எதிராக திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அந்த குற்றப்பத்திரிக்கை நகலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூன் 29-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

2 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

3 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

3 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

4 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

4 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

5 hours ago