கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் கூடுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இல்லாமல், வீடுகளை விட்டு வெளியே வருபவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி வித்தியாசமான முறையில் தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
அதாவது, தேவையில்லாமல் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு போலீசார் 10 கேள்விகள் கொண்ட தேர்வை ஒன்றை நடத்தி வருகின்றனர். கொரோனா குறித்த கேள்விகளுக்கு தவறான பதில் அளித்தால், ஒரு பதிலுக்கு 10 தோப்பு கரணம் போடவேண்டும் என்று கேள்வி தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் நூதன தண்டனையை அளிக்கும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுபோன்று பல இடங்களில் சாலையில் தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வித்தியாசமான முறையில் தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…