தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தண்டியுள்ளது. இன்று மட்டும் திருப்பூரில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று 1000-ஐ தண்டியுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து, 11 ஆக அதிகரித்துள்ளது. 50 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்ட 106 பேரில் அதிகபட்சமாக திருப்பூரில் 35 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியானது. ஏற்கனவே 25 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோவையில் இன்று மட்டும் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 97 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு 119 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று சென்னையில் மேலும் 18 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு 199 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தான் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாகும் இருக்கிறது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…