தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
முதல் முறையாக இன்று ஓரே நாளில் மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4241 ஆக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும் 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 1,021 பேருக்கு கொரோனா. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கொரோனா.
உயிரிழந்தவர்கள் ஒரு பக்கம் அதிகரித்தாலும் குணமானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,800 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக உயர்ந்துள்ளது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…