சென்னையில் உறவினர் வீட்டிற்கு வந்துசென்ற நிலையில் தருமபுரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நேற்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில், இதுவரை 8324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உறவினர் வீட்டிற்கு வந்துசென்ற நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 15 நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் 36 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…