சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பல்வேறு இடங்களிலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி உள்ளனர். இந்நிலையில், தனது கட்சிக்கு ஆதரவாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்களும், மூத்த நிர்வாகிகளும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
தற்பொழுது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, பார்த்திபனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பார்த்திபன் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…