கொரோனா தொற்று குறைந்து வருகிறது…! இன்னும் மக்களின் ஒத்துழைப்பு தேவை…! – சுகாதாரத்துறை செயலாளர்

Published by
லீனா

நெல்லை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த முறை பொதுமக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும்  நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தொடர்பாக மருத்துவ நண்பர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நெல்லை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த முறை பொதுமக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்த முறை கூடுதலாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் கொரோனா தொற்றின் பாதிப்பை வேகமாக குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வகங்களில் கூடுதலாக பாசிட்டிவ் என பரிசோதனை முடிவுகள் வந்தாலும், பாசிட்டிவ் இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தாலும் இதுகுறித்து தணிக்கை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பணியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் போன்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்றும்,   தடுப்பூசிகள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago