கொரோனா பாதிப்பு…வீட்டில் இருந்து மருத்துவ ஆலோசனை – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

Published by
Edison

சென்னை:கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறும் வகையில்,தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலானது மீண்டும் அதிகரித்தும் வருகிறது.அதன்படி,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக,கடந்த ஒரே நாளில் சென்னையில் மட்டும் 682 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் 250% ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில்,சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.சென்னையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேர் சென்டரை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் பெற உதவியாக தொலைப்பேசி எண்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் கூறுகையில்:”சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை வழங்க மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைகள் பெற 044-25384520, 044-46122300 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்புக் கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்”,என்று கூறியுள்ளார்.

மேலும்,பொதுமக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அடுத்த 10 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Recent Posts

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

20 minutes ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

1 hour ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

1 hour ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

2 hours ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

3 hours ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

15 hours ago