வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 வயது சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.
கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. மனிதர்களுக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பி வந்த நிலையில், தற்பொழுது விலங்குகளுக்கும் கொரோனாவின் தாக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.
கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல், கொரோனா நோய் தொற்று 2-ம் அலை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 வயது சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. இதனை தொடர்ந்து மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 11 சிங்கங்கள் பசியின்மை. சளி தொந்தரவு இருந்ததால் அதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…