வாக்காளர்கள் நாளை மாஸ்க் அணிந்து தான் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
சென்னையில்செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வாக்காளர்கள் நாளை மாஸ்க் அணிந்து தான் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். வாக்குப்பதிவின் போது கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோய் பாதித்தவர்கள் வாக்களிக்கலாம்.
தேர்தலுக்குப் பிறகு 7-ம் தேதியிலிருந்து கொரோனாவை தடுக்க வீடுவீடாக காய்ச்சல் குறித்து நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரை செய்யப்படும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
54 லட்சம் கொரோனா தடுப்பூசி நம்மிடம் இருந்தாலும், தினமும் 15 ஆயிரம் பேர் தான் தடுப்புசி போடுகின்றனர். மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்பு போல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 சுகாதாரப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துகிறது. மாஸ்க், சானிடைசர், கவச உடை உள்ளிட்டவை அடங்கிய கிட் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியானவர்கள் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…