தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 2,162 ஆக உயர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் இன்று சென்னையில் மட்டும் 94 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 82 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மொத்தம் 1,240 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு மேலும் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 30,580 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 48 பேர் இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளனர். இன்று மட்டும் 8,087 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,09,961 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 2,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பாதிப்பு விகிதம் 35.48 ஆகவும் குணமடைந்தவர்களின் விகிதம் 56 ஆகவும் உள்ளது. கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் 41 லிருந்து 44 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 33 அரசு, 11 தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

41 seconds ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

22 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

36 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago