தமிழகத்தை விடாமல் துரத்தும் கொரோனா.! இன்று ஒரே நாளில் 121 பேருக்கு பாதிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் இன்றும் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றும் மட்டும் 27 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,128 பேர் வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்களில் இன்று சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 30,692 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 47 பேர் இருக்கின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 6,850 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 93,189 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 2,058 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. அதில்,  பெண் குழந்தைகள் எண்ணிக்கை 56 ஆகவும், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 65 ஆகவும் உள்ளது. இதையயடுத்து 13 லிருந்து 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,697 பேரும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 240 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago