தமிழகத்தை விடாமல் துரத்தும் கொரோனா.! இன்று ஒரே நாளில் 121 பேருக்கு பாதிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் இன்றும் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றும் மட்டும் 27 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,128 பேர் வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்களில் இன்று சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 30,692 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 47 பேர் இருக்கின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 6,850 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 93,189 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 2,058 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. அதில்,  பெண் குழந்தைகள் எண்ணிக்கை 56 ஆகவும், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 65 ஆகவும் உள்ளது. இதையயடுத்து 13 லிருந்து 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,697 பேரும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 240 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

2 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

3 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

3 hours ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

4 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

5 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

5 hours ago