தமிழகத்தில் கொரோனா வைரஸின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி கொரோனா வைரஸ் தடுக்க, அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
அப்போது பேசிய அவர் , தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன. 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இன்றிரவு தமிழகத்திற்கு முதலில் 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வரும் என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது நிலையில் உள்ளது. 2-வது நிலையில் உள்ள கொரோனா தாக்கம் 3-ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். கொரோனாவின் தாக்கத்தை பொறுத்தே ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 8 ஆகவும், வைரஸில் இருந்து குணமடைந்து 21 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…