கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் உடனே சிகிச்சை அளிக்கப்படும். – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
கொரோனாவை வைரஸை அழிக்க உலக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, குணமடைந்து சென்றவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து, அதில் உள்ள பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, அதன் மூலம் கொரோனா பாதித்தவர்களை குணப்படுத்தும் முயற்சியில் தமிழகம் முயன்று வருகிறது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘ பிளாஸ்மா சிகிச்சை முறைப்படி கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் மருத்துவ குழுவுடன் ஆராய்ந்து வெகு விரைவில் பதிலளிப்பதாக கூறியுள்ளார். அனுமதி வந்தவுடன் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.’ என அவர் தெரிவித்தார்.
மேலும், ‘ பொதுமக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஆகவே முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தருமாறு,’ கேட்டுக்கொண்டார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…