புதுச்சேரி மாஹேவில் கொரோனா பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவால் இதுவரை 7447 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 239 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸிலிருந்து 643 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1574 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதுபோல தமிழகத்தில் கொரோனா வைரசால் 911 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்துள்ளார்கள். அந்த வகையில் புதுச்சேரியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மாஹேவில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதனிடையே புதுச்சேரியில் 8 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதில் ஒருவர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…