கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஆட்கள் தேவை.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா தடுப்பு பணியில் தமிழக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முக்கிய பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அது மிகவும் ஒரு சவாலான பணியாக காவலர்களுக்கு இருக்கின்றது. ஊரடங்கை மீறி வெளிய வருபவர்களை கட்டுப்படுத்துவது, கொரோனா பரவலை தடுப்பதற்கு பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த கொரோன தடுப்பு பணி என்பது மிகவும் சவாலாக இருக்கும் நிலையில், தங்களையும் இந்த பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றியவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கையை தமிழக காவல்துறை டிஜிபி- க்கு அனுப்பப்பட்டது. பின்னர் அந்த கோரிக்கைக்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை முடிந்து தற்போது, கொரோனா தடுப்பு பணியில் பணியாற்ற மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய 40 முதல் 50 வயதிற்குக்குட்பட்ட வீரர்கள் அவரவர் வசிக்கக்கூடிய மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆட்கள் தேவை என்பதால் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது என்று தமிழக காவல்துறை கூறியுள்ளது. இதற்கு முன் தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

50 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

1 hour ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago