மேலும் 25 பேருக்கு கொரோனா..பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அப்போது தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக இருந்த நிலையில் தற்போது 1,267 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை அளித்து வந்த 11 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது. மத்திய அரசு கூறுவதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கை தமிழகத்தில் துரிதப்படுத்தியது என்றும் கொரோனா தொற்றைத் தடுப்பதுதான் மிக முக்கியம் அதை தான் அரசு செய்து வருகிறது குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என்றும் 27 மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 5,590 பரிசோதனைகள் செய்து வருகிறோம் என தெரிவித்தார். மேலும் இதுவரை 17,835 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 16,452 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. 1,383 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

24 minutes ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

2 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

3 hours ago

த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் : பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…

3 hours ago

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…ஏமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

4 hours ago

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தாக்குதல் எப்படி? டிரம்பிடம் எழுந்த கேள்வி!

வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…

4 hours ago